கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் – திரை விமர்சனம்!
சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகும்போது அதை வாசித்தவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பது சாதாரணம். ஆனால், ஒரு மாநிலமே ஒரு நாவலைத் தழுவி உருவான படத்திற்காகக் காத்திருப்பது நிச்சயம் சாதாரணமானது அல்ல.
அந்தப் பெருமையைச் சேர்த்திருப்பது நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் திரைப்படம்தான். 1990-களில் கேரள மாநிலம் ஆழாப்புழாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் பிழைப்பிற்காக சௌதி செல்கிறார். ஆனால், அங்கு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக மாற்றப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடுகிறது. சொந்த மண்ணைவிட்டு எங்கோ குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறோமே என வேதனைப்படும் நஜீப், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கிறார்.