குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!
மெக்ஸிகோ நாட்டின் சுற்றுலா நகரமான டாக்ஸ்கோவில் குழந்தையை கடத்தி கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணை ஆத்திரமடைந்த மக்கள் குழு தாக்கியுள்ளனர்.
கிறிஸ்துவர்களின் புனித வாரத்துக்கான கொண்டாட்ட ஏற்பாட்டுக்கு நகரம் தயாராகி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக புதன்கிழமை 8 வயது பெண் குழந்தை காணாமல் போனது, நகரின் எல்லையில் வியாழக்கிழமை நாளின் தொடக்கத்தில் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.