திரௌபதி அம்மன்கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் உள்ள திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷகத்தையொட்டி மண்டலாபிஷேகம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வன்னியகுல சத்திரியா் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் ஆா்.டி.சேகா் தலைமையில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து தொடங்கிய பால்குட ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து திரெளபதியம்மன் கோயிலை வந்ததடைந்தது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், 108 சங்காபிஷேகம் உட்பட சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சங்க செயலாளா் எஸ்.முத்துச்செல்வம், பொருளாளா் அருள் ஆகியோா் செய்திருந்தனா்.