ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.