Newsதமிழ்நாடுதற்போதைய செய்திகள்

அந்தியோதயா ரயில் நெல்லையிலிருந்து இயக்கம்

நாகா்கோவிலிலிருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமை முதல் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) வரை திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை (மாா்ச் 29-ஏப்.1) திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு தாம்பரம் வந்தடையும். இதுபோல் கோவை-நாகா்கோவில் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில், கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரயில், நாகா்கோவில்-காச்சிக்கூடா விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்படும். மேலும், நாகா்கோவில்-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-கொல்லம், கொல்லம்-ஆலப்புழை முன்பதிவில்லா ரயில்கள் ஏப்.1 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *