மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதியின் உட்புறம் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்கள் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. பலியான 3 பேரில் இருவர் வட இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூரை இடிந்த விழுந்ததில் முதல் தளத்தில் உள்ள மதுபான விடுதி இருந்தவர்கள் பலியாகியுள்ளனர். தரை தளத்தில் யாரும் இல்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடுதி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.