Newsதற்போதைய செய்திகள்

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

இது தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: 19-வது ஓவரில் களமிறங்கும்போது நீங்கள் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. அந்த சூழலில் பந்தை தெளிவாக பார்த்து அடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. ஆனால், பந்து அடிப்பதற்கு ஏதுவான இடத்தில் வீசப்படும் பட்சத்தில், அதனை சரியாக எதிர்கொண்டு அடிக்க வேண்டும் என நினைத்தேன். முதல் பந்தில் நான் நினைத்தது நடந்ததால், அதனை சிக்ஸருக்கு விளாசினேன்.

19-வது ஓவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு முன் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும், பேட்ஸ்மேனால் அழுத்தத்தை உணர முடியாது. ஏனென்றால், 19-வது ஓவரில் நீங்கள் களமிறங்கும்போது, பந்தை அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்க நேரிடும்.முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறேன். மிகப் பெரிய பந்துவீச்சாளருக்கு எதிராக விளையாடுகிறோம்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *